728x90 AdSpace

<>
Latest News
Friday, 4 October 2019

கோட்டாபயவின் குடியுரிமை விசாரணைகள் நிறைவு: 6 மணிக்கு தீர்ப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜ பக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய் யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கின் தீர்ப்பு மாலை 6 மணிக்கு வழங்கப்பட வுள்ளது. இந்த தொடர்பாக சகல தரப்பினரும் தங்களது ஆவணங்களை இன்று (04) பிற்பகல் 3.15 க்கு முன் னர் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிக ளாக குடிவரவு குடிய கல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பலர் பெயரிடப் பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடியுரிமை தொடர்பான முறையான சான்றி தழை சமர்ப்பிக்காமல் இந்நாட்டில் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

 அதன் காரணமாக குறித்த பத்திரங்களை ரத்துச் செய்யும் உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் மற்றும் மனு விசாரணை நிறைவடையும் வரை குறித்த பத் திரங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன் றினை வெளியிடுமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரி யிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கோட்டாபயவின் குடியுரிமை விசாரணைகள் நிறைவு: 6 மணிக்கு தீர்ப்பு! Rating: 5 Reviewed By: Thamil