நண்பர்களும் எதிரிகளும் இடம் மாறிக்கொள்ளும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்களை சமகாலத்தில் உள்ளுரிலும் காணமுடிகிறது உலக அரங்கிலும் காணமுடிகிறது.
வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ள குர்துகளின் முதுகில் அமெரிக்கா குத்தியவுடன் தமது இருப்புக்கு ஆபத்தாக எல் லைதாண்டி வரும் துருக்கியின் வியூ கத்தை முறியடிக்க தமக்கு ஒவ் வாமை கொண்ட அசாத்தின் இராணு வத்தோடு குர்துகள் சமரசத்தை எட்டி னர்.
இவ்வாறாக குர்துகள் எடுத்த திடீர் சமரச நிலையை எதிர்பார்க்காத டொனா ல்ட் ரம்போ தன்னால் முதுகில் குத்தப்பட்ட குர்துகளின் ஆற்றாமையையும் குர்துகளை கைவிட்டமை ஒரு துரோகம் அமெரிக்க ராணுவ உயர்மட்டத்தில் கிளம்பிய எதிர்ப்பையும் சமாளிக்க துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவ டிக்கைக்கு பதிலடி என்ற கோதாவில் சில நகர்வுகளில் இறங்கியுள்ளார்.
அதன் முதற்கட்டமாக துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், துருக்கி அரச இயந்திரத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வோசிங்டன் கூறுகிறது. அத்துடன் இந்த நிலவரங்களை கையாளவென அமெரிக்க துணை அரசதலைவர் மைக் பென்சும் விரைவில் ஓடோடிச் செல்ல வுள்ளார்.
இது உலக அரங்கில் நண்பர்களும் எதிரிகளும் இடம்மாறிக்கொள்ளும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்களுக்கு ஒரு உதாரணம். உலக அரங்கில் இவ் வாறு இடம்பெற இலங்கைத்தீவின் அரசியல் அரங்கிலும் இவ்வாறான நகர்வு களும் பீறிட்டுச்செல்லும் சில காட்சிகளும்; தெரியத்தான் செய்தன.
இன்னும் சரியாக ஒரு மாதத்தில் நவம்பர் 16 இல் சிறிலங்காவி முதன்மைத் தலையாரியை தெரிவுசெய்யும் தேர்தல் இடம்பெறவுள்ளது.
ஆயினும் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான நகர்வை எடுப்பது?
எந்தப்பிசாசுக்கு வாக்களிப்பது? என இருக்கக்கூடிய முக்கிய பேசுபொருளுக்கு தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளால் இன்னமும் முறையான விடை வழங் கப்படவில்லை. இதற்குமாறாக தேர்தல் புறக்கணிப்பு என்ற குரல்கள் தேய் மானமாகவும் சிங்கள வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வரட்டும் அதன் பின்னர் பார்க்கலாம் என்ற குரல்கள் தான் தமிழர் பிரதிநிதிகளிடம் இருந்து ஒலிக்கச் செய்கின்றன.
இவ்வாறான ஒரு பின்னணியில்தான் இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் ஒரு பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவதற்காகவும் தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்த முயற்சியின் ஒரு அத்தியாயம் நேற்று முடிந்தவேளை தமிழ் கட்சிகளின் ஆலோசனைக்கு அமைவாக தயாரிக்கப்பட்;ட பொது உடன்பாடு ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளும் ஒப்பமிட் டிருந்தன
ஆயினும் பலமான வாதப்பிரதி வாதங்களுடன் நகர்ந்த இந்த அத்தி யாயத்தின் ஒரு ஒரு முக்கிய மையப்புள்ளியாக சிறிலங்காவின் இடைக் கால அரசியலமைப்பை எதிர்ப்பதா?
இல்லையா என்ற விடயம் மாறியிருந்தது.
குறிப்பாக சிறிலங்காவின் இடைக் கால அரசியலமைப்பை எதிர்க்கும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வாசகங்கள் இந்த உடன்படிக்கை ஆவணத்தில் இடம்பெற வேண்டும் என்பதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விடாப்பிடியாக இருந்தது ஆனால் ஏனைய கட்சிகளோ இதற்குத்தயாராக இல்லை.
இதனால் தங்களது நிலைப்பாட்டில் சமரசம் செய்த் தயாராக இல்லாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலிருந்து துருத்தியபடி வெளியேறி யது. இறுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆவணத் தில் ஒப்பமிட்டனர்.
தற்போது இந்தக் கூட்டத்தில் நடந்தது என்ன? என்ற பாணியிலான தன்னிலை விளக்கம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த்தேசிய மக்கள் முன்ன ணித்தர்ப்பில் இருந்தும் அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான் ஒற்றுமையை குழப்புவதாக விமர்சனம் சுரேஷ்பிரேமச்சந்திரன் தரப்பில் இருந்தும் வருகின்றன.
ஆனால் நேற்று இந்த 5 கட்சிகளுக்கும் இடையில் ஒப்பமிடப்பட்ட இந்த ஆவ ணம் இந்தத்தேர்தலில் தமிழ்மக்கள் எந்த நகர்வை எடுப்பது?
அல்லது யாருக்கு வாக்களிப்பது என்ற வினாக்களுக்கு நேரடியாக விடை வழங்கும் ஒரு ஆவணமாகத்தெரியவில்லை
மாறாக சிறிலங்காவின் முதன் மைத் தலையாரிக்குரிய தேர்தல் களத்தில் நிற்கும் சிங்களத்தின் முன்னணி வேட்பாளக்குதிரைகளிடம் தமிழர்களின் சார்பாக தமிழ்கட்சிகள் முன்வைக்கப் படவேண்டிய 12 அம்சங்களை கோரும் ஒரு ஆவணமாகவே காட்சியளிக்கின் றது.