இலங்கையில் தற்போது செயற்பட்டு கொண்டிருக்கும் ஒரேயொரு மாகாண சபையான ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று (8) நள்ளிரவுடன் முடிவடைகிறது.
இன்று நள்ளிரவின் பின்னர் இலங்கையில் எந்த மாகாணசபையும், மக்களால் தெரி வான நிர்வாகத்தின் கீழ் இயங்காது.
ஊவா மாகாணசபையின் ஐந்து ஆண்டு கால ஆட் சியில், ஐந்து ஆளுநர்கள் மற்றும் மூன்று முதலமைச்சர்க ளின் கீழ் செயல்பட்டது.
ஊவா மாகாசபையின் மொத்த ஆசனங்கள் 34. 2014 மாகாண சபை தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 19 இடங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 13 இடங்களையும், ஜனதா விமுக்தி பெர முன 2 இடங்களையும் வென்றன.
மாகாணசபை தேர்தலை சந்திக்க அச்ச மடைந்த தற்போதைய அரசு, பல்வேறு உபாயங்களை பின்பற்றி தேர்தலை தொடர்ந்து தள்ளி வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.