உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட அவசரகால ஒழுங்குமுறைகளின் சில விதிகளில் அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்த அடிப்படை உரிமைகளை மீறுவதாக தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை முடிக்க நீதிமன்றம் இன்று (08) அனுமதியளித்தது.
மனுவை வாபஸ் பெறுவதாக மனுதா ரர்கள் விடுத்த கோரிக்கையை பரி சீலித்து உயர் நீதிமன்றம் இந்த உத் தரவை பிறப்பித்தது.
மாற்று கொள் கைகளிற்கான நிலையத்தின் இயக்குநர் பாக்கியசோதி சரவண முத்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நாட்டில் அவசரகால விதிமுறைகள் நடைமுறையில் இல்லாததால் மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, மனுவை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதித் தது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி பிறப்பித்த அவசரகால சட்டத் தின், சில விதிகள் நீதித்துறையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் என்றும் அதன் மூலம் அரசியலமைப்பை மீறும் என்றும் மனுதாரர்கள் தெரிவித்தி ருந்தனர்.