ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பாவிக்கும் உத்தியோகபூர்வ இல் லத்தையே, அவர் ஓய்வின் பின்னர் பாவிக்கவும் அமைச்சரவை அனுமதிய ளித்துள்ளது.
அத்துடன், ஓய்வின் பின்னரும் அவருக்கு சிறப்பு பாதுகாப்பை அளிக்க அமைச் சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (15) நட ந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அங்கீ காரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஜனாதி பதி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரண மாக, ஓய்வின் பின்னர் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டே இந்த விசேட பாதுகாப்பு வழங்க முடிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு மகாகமசேகர மாவத்தையிலுள்ள இல்லத்தையே ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ இல்லமாக பாவித்து வருகி றார்.
ஓய்வின் பின்னரும் இந்த இல்லத்தை மைத்திரி பயன்படுத்த அனுமதிக்கும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்தது.