தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியான கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்களை வெளியிடாமல் இருக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித் துள்ளது.
இதன்படி, தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கூறப்படுகின்றது.
தேவையற்ற போட் டித் தன்மையினால் மாணவர்களி டையே அநீதி இழைக்கப்படுவதை தடுப்பது திணைக்களம் எடுத்துள்ள இந்த தீர்மானத்துக்கு காரணம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.