728x90 AdSpace

<>
Latest News
Monday, 7 October 2019

கடந்த வருடம் அதிர்வலைகளை ஏற்படுத்திய முன்னாள் போராளி விவகாரம்! தற்போதைய சம்பவம் பழிவாங்கலா?

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி கெரோ யின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு நீதி மன்றில் முன்னி லைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபரது வீட்டு வளாகத்தில் 4 கிராம் கெரோயின் இருந்ததாக தெரிவித்து புளியங் குளம் விசேட அதிரடிபடையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, கனகரா யன்குளம் பொலிஸ்நிலையத்தில் ஒப்ப டைக்கப்பட்டார். 

அதன்பின்னர் கனகாராயன்குளம் பொலிசா ரால் வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. கடந்தவருடம் கனகராயன்குளம் பகு தியில் உணவகம் ஒன்றினை நாடாத்தும் இஸ்லாமிய நபருக்கும், 

உணவகம் உள்ள காணியை குத்தகைக்கு வழங்கிய உரிமையாளர் என தெரி விக்கும் முன்னாள் போராளிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட் டது. 

சம்பவ இடத்திற்குச் சென்ற கனகராயன்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதி காரி குறித்த முன்னாள் போராளி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய தாக தெரிவித்து காணி உரிமையாளர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும், அவரது இரு பிள்ளைகளும் மாங்குளம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர். 

குறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கனகராயன்குளத்தில் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றும் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

குறித்த விடயத்தில் தொடர்புடைய காணியின் உரிமையாளர் என தெரிவிக் கப்படும் முன்னாள் போராளியே கெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யபட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கடந்த வருடம் அதிர்வலைகளை ஏற்படுத்திய முன்னாள் போராளி விவகாரம்! தற்போதைய சம்பவம் பழிவாங்கலா? Rating: 5 Reviewed By: Thamil