728x90 AdSpace

<>
Latest News
Friday, 4 October 2019

ஸ்ரீலங்காவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் விஷேட அம்சம் என்ன தெரியுமா...?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் முறை தேர்தல் களத்தில் களமிறங்கா விட்டால் இலங்கையில் முதன் முறை யாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிர தமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன் னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத முதலாவது தேர்தலாக இது அமையும் என்பது விஷேட அம்சமா கும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ் வாறு தெரிவித்தார். 

 அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிடுவதாக இது வரை யில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இம்முறை தேர்தலில் அவர் களமிறங்காவிட்டால் இலங்கை வரலாற்றில் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் விஷேடமானதாக இருக்கும். 

காரணம் இதுவரையில் இடம்பெற்றுள்ள தேர்தல்களில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என யாரேனுமொருவர் களமிறங்கியுள்ளனர். 

இவர்களே நாட்டின் பிரதான அரசியல் தலைவர்களாகவும் கருதப்படுகின் றனர். இவ்வாறு பிரதான தலைவர்கள் களமிறங்காத முதலாவது தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தால் அதுவே விஷேட அம்சமாகும் என அவர் தெரி வித்தார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஸ்ரீலங்காவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் விஷேட அம்சம் என்ன தெரியுமா...? Rating: 5 Reviewed By: Thamil