கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகி யோருக்கு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்குவது, சட்டத்திற்கு முரணான விடயம் என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள பிணை உத்தரவை இரத்து செய்து கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.