728x90 AdSpace

<>
Latest News
Friday, 4 October 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆவணத்தை பெற்றனர் சமல், ஹிஸ்புல்லா!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேவையான சபாநாயகரின் உறுதிப்படுத் தல் கடிதங்களை தற்போதைய எம்.பிக்கள் இருவர் பெற்றுள்ளனர். 

அதில், மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவும் ஒருவர். இதன்மூலம், கோட்டாபய களமிறங்க முடியாவிட்டால் சமல் ராஜபக்ச கள மிறங்குவார் என்பது தெரிய வருகிறது. 

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் வேட்பாளர், தற்போதைய அல்லது முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் அந்த உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று, தேர்தல் கள் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

நாடாளுமன்ற செயலாளரிடம் இந்த உறுதிப் படுத்தல் கடிதங்களை பெற்றவர்களின் விபரங் கள் வெளியாகியுள்ளன. அதில் தற்போதைய எம்.பிக்கள் குமார வெல்கம, சமல் ராஜபக்ச ஆகியோர் கடிதங்களை பெற்றுள்ளனர். 

முன்னதாக, ஜேவிபி தலைவர் அனுர குமார திஸநாயக்க இதே போன்ற கடிதத்தைப் பெற் றிருந்தார். அனுர எதிர்வரும் தேர்தலில் ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளராக கள மிறங்குகிறார். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் M.L.A.M.ஹிஸ்புல்லா, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அனுருத்த போல்கம்போலா மற்றும் சமன் ஸ்ரீ ஹெராத் ஆகியோரும் கடிதங்களைப் பெற்றுள்ளனர்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆவணத்தை பெற்றனர் சமல், ஹிஸ்புல்லா! Rating: 5 Reviewed By: Thamil