வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் அப்பத்திரிக்கையின் யாழ்.பிராந்திய அலுவலகச் செய்தியாளர் தி,சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்காக இன்று சென்றார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பொலிஸ் தலை மையகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.
கோட்டாபய ராஜபக்சவுடன் டக்ளஸ், வரதர் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர்.
என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட் டவர்கள் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார் என செய்தி வெளியாகியமை தொடர்பிலையே அவரி டம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
செய்தியாளர் கடந்த 2 மாதமாக விபத்து ஒன்றில் சிக்கி நடக்க முடியாத நிலை யில் இந்த விசாரணையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றி தருமாறு பொலிஸ் தலைமையகத்தை கோரிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.
விசாரணை திகதியில் மாற்றம் செய்யலாம் ஆனால் விசாரணைக்கு கொழும்பு தலைமையகத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ் வாறான நிலையிலேயே குறித்த ஊடகவியலாளர் விசாரணையை எதிர் கொண்டார்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர் சங்க தலைவி தெரிவிக்காத விடயங் களையும், செய்தியாளர் செய்தியாக குறிப்பிட்டதாக முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.