முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் சார் பில் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன்.
பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவ ரெலியா மாவட்டத்தில் முரளிதரன் களமிறங்கவுள்ளதாக முன்னதாக சில வதந்திகள் சமூக வலைத்தளங்க ளில் உலாவியது. இதை நம்பிய சில இணைய ஊடகங்கள் அதை செய்தி யாக பிரசுரித்திருந்தன.
இதையடுத்து, முரளிதரன் அவசரமாக இதை மறுத்துள்ளார். இது வெறும் வதந்தி மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நுழையப் போவதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. இது போன்ற வதந்திகளை பரப்ப வேண் டாம் என தனது ரசிகர்களிடம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.