யாழ்ப்பானத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையாப்பாவின் பேரன் நிஷான் துரையப்பா கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நேற்று காலை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
ஹால்டன் பிராந்திய கூடுதல் தலைமை பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பா தற்போது பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரி யாக நியமிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடா வில் 25 ஆண்டுகள் பொலிஸ் சேவை அனு பவம் கொண்டுள்ள நிஷான், குற்ற விசா ரணைப் பிரிவின் கீழ், போதைப் பொருள் ஒழிப்பு, துப்பாக்கி குழுக்கள் தொடர் பான விடயங்களை கையாண்டுள்ளார்.
1975 ஆம் ஆண்டு அல்பிரட் துரையாப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர் நிஷான் குடும்பம் கனடாவின் பீல் பிராந்தியத்திற்கு அகதிகளாக சென்றுள்ளது.
கனடாவுக்கு குடியேறும்போது நிஷான் துரையப்பா 3 வயதானவர் எனவும் தொடர்ந்து அங்கேயே வளர்ந்த நிஷான் துரையப்பா 1995 ஆம் ஆண்டு ஹால் டன் பிராந்திய பொலிஸ் துறையில் சாதாரண காவலராக பணியில் இணைந் தார். தற்போது பீல் பிராந்தியத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப் பேற்றுள்ளார்.