728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 1 October 2019

அத்தியாவசிய சேவையாகிறது ஆசிரியர் மற்றும் ரயில் சேவைகள்; அமைச்சரவை அனுமதி!

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவ தற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

இதேவேளை ரயில்வே தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகளுக்கும் விசேட அமைச்சரவைக் குழுவிற்குமிடையில் இன்று மாலை நடைபெற்ற பேச்சு வார் த்தை தோல்வியில் முடிவுற்றதால் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

இன்று மாலை ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்ச ரவை உபகுழுவிற்கும் இடையிலான பேச்சுவார்த்ததையின் போது தமது கோரிக்கைகளுக்கு தகுந்த தீர்வொன்று கிடைக்கப்பெறவில்லை.

அதனால் வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜானக்க பெர்ணான்டோ தெரிவித்தார். 

மேற்படி அமைச்சரவை உபகுழுவில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, வஜிர அபேவர்தன, ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். ரயில்வே தொழில் சங்கங்களின் தொடர் வேலை நிறுத்தத்தின் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

ரயில்வே தொழிற்சங்கங்கங்கள் இன்று ஆறாவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இன்று 10 ரயில்களும் மாலை 9 ரயில்களுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 

இதன் காரணமாக காலையில் தொழில் நடவடிக்கைகளுக்காக செல்லும் அரச மற்றும் தனியார் ஊழியர்களும் மாலையில் வீடு திரும்பும் ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

சம்பள முரண்பாடுக ளுக்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்களின் தொழில் சங்கங்களின் சுமார் 15000 உழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அத்தியாவசிய சேவையாகிறது ஆசிரியர் மற்றும் ரயில் சேவைகள்; அமைச்சரவை அனுமதி! Rating: 5 Reviewed By: Thamil