அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள தமிழ் குடும் பத்தை கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு ஐக் கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
நடேசலிங்கம்- பிரியா தம்பதியினரும் அவர்களது இரு பிள்ளைகளும் நாடு கடத்தலுக்கெதிராக அவுஸ்திரேலி யாவில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களை 30 நாட்களுக்குள் தடுப்பு முகாமிலிருந்து விடுவித்து சமூகத் தில் வாழ அனுமதிக்குமாறும் அங்கி ருந்து கொண்டு அவர்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த குடும்பத்தின் சார்பில் வாதாடிவரும் சட்டத்தரணி கரீனா ஃபோர்ட்ஸ் ஐ.நாவின் தலையீட்டை கோரியிருந்த நிலையில் அவருக்கு அனுப்பி வைக் கப்பட்ட பதில் கடிதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இதனைக் குறிப் பிட்டுள்ளது.
தமிழ்க் குடும்ப விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு சார்பில் வழங் கப்பட்ட விளக்கத்தை ஆராய்ந்த பின்னரே ஐ.நா மனித உரிமைகள் பேரவை இந்த நடவடிக்கையை எடுத்திருந்ததாகவும், இதற்கு செவிசாய்க்க வேண்டிய கடப்பாடு அவுஸ்திரேலிய அரசுக்கு இருப்பதாகவும் தமிழ் ஏதிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதாக இருந்தால் அந்த குடும்பம் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவிலேயே சமூகத்துடன் வாழ அனுமதிக்கப்படுவார்களா, அல்லது அவு ஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்படுவார்களா என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த ஈழத் தமிழர்களான நடேசலிங்கம், பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் சுமார் ஒன்றரை வருடங்களாக மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந் தனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில், சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமா னத்தை விட்டு வெளியேற்றப்பட்டு,
பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு கால அவகாசம் எடுத்திருந்தது.
இது தொடர்பில் பின்னர் தீர்ப்பளித்தபோது, தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என செப்டம்பர் 19ம் திகதி உத்தரவு வழங்கியது.
இதன்படி பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர் பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ் விசா ரணை முடியும் வரை அவர் நாடு கடத்தப்படக்கூடாது எனவும் நீதிபதி தெரி வித்தார்.
தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப் பிரி த்து நாடு கடத்த முடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடு கடத்தலிலி ருந்து தற்காலிகமாக தப்பித்திருந்தது. அவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகா மில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.