எந்த வேட்பாளருக்கு எதிராகவோ யாரினதும் அழுத்தத்திற்காகவோ ஜனாதி பதி தேர்தலில் போட்டியிடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி ஜென ரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் அடிமனதிலுள்ள எதிர்பார்ப்புக் களை நிறைவேற்றுவதற்காக கற்றவர் கள், புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் வல்லு நர்களின் சார்பில் தேசிய மக்கள் இயக் கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங் கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.
கட்சி சாராத சுயாதீனமான வேட்பாளராகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடுகிறேன். நாட்டின் மீது அன்பு செலுத்தும் நபர்களே எமது அணியில் இருக் கிறார்கள்.
71 வருட கால கட்சி அரசியல் முறைமையில் இருக்கும் குறைபாடுகள் மாற் றப்பட வேண்டும். இராணுவ தளபதியாக இருந்தாலும் சிவில் நிர்வாகம் பற்றி அனுபவம் உள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை ஏனைய வர்கள் தான் தவறாக பயன்படுத்தினார்கள்.
நாம் கட்டுக்கோப்புடன் செயற்பட்டவர்கள்.
எமது அணியில் தனிமுடிவு அன்றி கூட்டாகவே முடிவுகள் எடுக்கப்படும்.மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனை நிறைவேற்றவே போட்டியிடுகிறேன் என்றார்.