728x90 AdSpace

<>
Latest News
Thursday, 3 October 2019

ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வந்த புதிய நெருக்கடி!

இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பெருமளவு வேட்பாளர்கள் களமிறங்குவதால், தேர்தல் கள் ஆணைக்குழு புதிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 

இதன்படி வாக்களிப்பு நிலையங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் முகவர்க ளுக்கான இடவசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் கடுமையான நெருக் கடிகளை சந்திக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கடந்த புதன் கிழமை வரை 20 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இது ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாகும். 

ஒவ்வொரு வேட்பாளரின் சார்பிலும் வாக்களிப்பு நிலையங்களில் இரண்டு முகவர்களை நியமிக்க முடியும். இதனால், 20 வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் 40 முகவர்களுக்கான இடவசதி களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே அவர்க ளுக்கான இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இடவசதிப் பிரச் சினை இருந்தால் ஏனையவர்களுக்கு வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியி லேயே இடமளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.” என்றும் அவர் தெரிவித்துள் ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வந்த புதிய நெருக்கடி! Rating: 5 Reviewed By: Thamil