728x90 AdSpace

<>
Latest News
Thursday, 3 October 2019

இலகுவாக வெற்றிக்கனியை சுவைக்கப்போகின்றார் சஜித்; ஆருடம் கூறும் சிரேஷ்ட ஊடகவியலாளர்!

“கரு அல்லது ரணில் போட்டியிட்டிருந்தால் கோட்டபாயவிற்கு வெற்றிக்கான வாய்ப்புக்கள் இருந்தன. சஜித் ஒரு பெரும் ஆள் இல்லாது போனாலும் தாழ்த் தப்பட்ட மற்றும் ஏழைகளின் நாயகனாக சஜித் மக்களால் பார்க்கப்படுகின்றார். 

இது மஹிந்த மற்றும் கோட்டபாய தரப்புக் கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். அத னால் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் இலகு வான வெற்றியொன்றை பெறப் போகின் றார்.” இவ்வாறு மூத்த ஊடகவியலாள ரும் அரசியல் ஆய்வாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலில் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற் கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தத் தேர் தல் இந்தியாவில் காங்கிரஸூக்கும் - மோடிக்கும் நடந்த தேர்தலை ஒத்தது. மோடி மிகவும் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவர். 

அவர் தமது பிரச்சினையைத் தீர்ப்பாரா என்பது எல்லாம் மக்களின் எதிர்பார்ப் பல்ல. தங்களுடைய தரத்தில் ஒருவர் அரசனாகின்றான் என்பதே மக்களின் மகிழ்ச்சியாகின்றது. மோடியைத் தோற்கடிக்க அடிமட்டத்தில் இருந்து ஒருவர் வந்தால் மட்டுமே முடியும். 

சஜித்தின் தந்தை பிரேமதாஸ அடிமட்ட மக்களுக்கு அதிக சேவை செய்தவ ராக மக்களிடையே பிரபல்யமானவர். உண்மையிலேயே ஏழைகள் தலை நிமிர்ந்து நிற்கும் பல திட்டங்கள் அவருடையவை. அவற்றால் வாழும் கிரா மத்தவர்கள் அதிகமானவர்கள். 

அந்தத் திட்டங்களே வேறு பெயர்களில் நாட்டில் இப்போது வலம் வருகின்றன. இலங்கையில் பின்தங்கிய சமூகத்தினர் அதிகமாக வாழ்கிறார்கள். இதைவிட சஜித்தை அவர்கள் தமது மீட்பராக நினைக்கிறார்கள். இதனால் சஜித் இலகு வான வெற்றியொன்றைப் பெறப் போகின்றார். 

அடிமட்ட மக்கள் எனும்போது அது தென் பகுதியில் மட்டுமல்ல வடக்கிலும் - கிழக்கிலும் - மலையகத்திலும் கூட இதே நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தநிலை கோட்டபாயவிற்கு இல்லை. 

“எதிர்காலத்தில் வரவுள்ள ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதிகாரம் கூட இருக்காது. பெயரவில் ஒரு ஜனாதிபதி மட்டுமே. அதை இன்னும் எவரும் விளங்கிக்கொள்ளவில்லை. அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்துக்கு இயற்கையாகவே சென்றுவிடும். 

ஆகக் குறைந்தது ஒரு அமைச்சைக் கூட ஜனாதிபதி வைத்திருக்க முடியாது. 19வது திருத்தச் சட்டத்தால் இதுவே நடந்துள்ளது. இலங்கையின் பொருளா தாரம் மட்டுமல்ல சமூக வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ள தருணம் இது. மாற்றம் ஒன்று தேவையான நேரம். 

மாற்றுப் போட்டிகள் இருந்தாலும் சஜித் மற்றும் கோட்டபாய ஆகியோர் இடை யில்தான் பிரதான போட்டி உள்ளது. ஐ.தே.கவுக்கு உள்ள வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற சஜித்துக்கு அதிக வாய்ப்பே உள்ளது. இது மஹிந்த மற்றும் கோட்டபாய தரப்புக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

இங்கே சஜித் பெரும் தர்சனவாதியா? எதிர்கால சிந்தனை உள்ளவரா? என்பதை யெல்லாம் இந்த அடிமட்ட மக்கள் தேடப் போவதில்லை. எங்களில் ஒருவ ருக்கே என்று அந்த மக்கள் வாக்களிப்பதாக வாக்களிப்பார்கள். 

அதனால் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனா திபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம்” - என்று கூறியுள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இலகுவாக வெற்றிக்கனியை சுவைக்கப்போகின்றார் சஜித்; ஆருடம் கூறும் சிரேஷ்ட ஊடகவியலாளர்! Rating: 5 Reviewed By: Thamil