யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து வரும் 17ஆம் திகதி விமான சேவைகள் ஆரம்பித்து வைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பலாலி விமான நிலையத்தை யாழ்ப் பாணம் சர்வதேச விமான நிலைய மாக பெயர் மாற்றம் செய்யும், அமை ச்சரவைப் பத்திரம் அமைச்சர் அர் ஜூன ரண துங்கவினால் அமைச்சர வையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக குறுகிய காலத்துக் குள் தரமுயர்த்தப்பட்டுள்ளது, அரசாங்கத்தின் முக்கியமானதொரு வெற்றியா கும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த மாதத்தில் இருந்து பிராந்திய விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகை யில், பலாலி விமான நிலையம் 22 பில்லியன் ரூபா செலவில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரு கிறது.
ஜூலை 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள், வரும் 10ஆம் திகதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஒக்ரோபர் 17ஆம் திகதி சிறிலங்கா ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்து விமான சேவைகளை ஆரம் பித்து வைக்கவுள்ளார்.
முதற் கட்டமாக இங்கிருந்து, தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவை களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பலாலி விமான நிலைய ஓடுபாதை 950 மீற்றருக்கு அபிவிருத்தி செய்யப்பட்டு, சி-100 வகையைச் சேர்ந்த 72 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்கள் இயக்கப்பட வுள்ளன.
இரண்டாவது கட்டமாக ஓடுபாதையின் நீளம் 1.5 கி.மீற்றராக விரிவாக்கப்பட்ட பின்னர், 1800 கி.மீ தொலைவு வரை பயணிக்கக் கூடிய விமானங்களை தரை யிறக்கக் கூடியதாக இருக்கும்.
மூன்றாவது கட்டமாக, இந்த விமான நிலையத் தின் ஓடுபாதை 2.3 கி.மீற்றராக விரிவாக்கப்பட்டு, ஏ-320 -321 விமானங்களைத் தரையிக்கக் கூடிய வசதிகள் செய்யப்படும்.
அதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துடன், கொழும்பு இரத்மலானை விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் ஆகியன வும் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, சிறிலங்காவின் சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக அதி கரிக்கவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமது பகுதிகளில் விமானங்கள் பறக்கவுள்ள நாளை எதிர் பார்த்து காத்திருந்த யாழ்ப்பாண மக்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி யாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.