ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜ பக்சவை ஸ்ரீலங்கா பிரஜையாக ஏற்க வேண்டாம் எனக் கோரி மேன் முறை யீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கும் தங்களுக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறி வித்துள்ளது.
சிங்கள பௌத்த மக்களின் வாக்கு களை சிதறடிப்பதற்காக ஐக்கிய தேசி யக் கட்சி பல்வேறு வேட்பாளர்களை முன்நிறுத்தியிருப்பதாக முன்வைக் கப்படும் குற்றச்சாட்டையும் ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள் ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பிரஜா வுரிமையை பெற்றுக்கொண்ட முறைமையை சவாலுக்கு உட்படுத்தி சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தாக்கல் செய்த மனு மூன்றாவது நாளாகவும் மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான யசந்த கோத்தா கொட தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்ற நிலையில்,
கோட்டாபய ராஜபக்சவுடன் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாத காரணத் தாலேயே ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அவரை ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்து அகற்றுவதற்காக சதி செய்து வருவதாக பொதுஜன முன்னணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதி பதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இருப்ப தாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்களும் சாடிவருகின்றனர்.
குறிப்பாக நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறுவதைத் தடுக்கவே சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளர்களான பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, காமினி வியங்கொட ஆகியோரைக் கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் நகர்த்தல் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் பொதுஜன முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஒக்டோபர் 4 ஆம் திகதியான இன்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கான பிரசார அலுவலகமொன்றை கண்டியில் திறந்துவைத்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பொதுஜன முன்னணியினரின் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்தார்.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அஷோக்க அபேசிங்க உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.