ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொண்டு, நாடாளுமன்ற தேர்தலையும் வெற்றி கொள்வதற்காகவே ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுடான சந் திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரி விக்கையிலேயே இதனைக் கூறியுள் ளார்.
நாம் நாடாளுமன்றத்தில் சிறுபான் மையாக இருந்துகொண்டு நாட்டில் பல் வேறு அபிவிருத்திப் பணிகளை முன் னெடுத்தோம்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியையும், நாடாளுமன்றத் தில் பெரும்பான்மை அதிகாரத்தையும் பெற்றுத் தந்தால், எம்மால் அபிவிருத் தித் திட்டங்களை துரிதப்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.