நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாது பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் செய்ததற்கும் சட்டதரணிகள் மீது தாக் குதல் மேற்கொண்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் பாரிய கண்டன போராட்டம் ஒன்று நடை பெறவுள்ளது.
சட்டதரணிகள் மற்றும் தமிழர் மரபு ரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் பொதுமக்கள் இணை ந்து இப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் உள்ள வைத்தியசாலையிலிருந்து நீதிமன்ற வீதியூ டாக சென்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக கண்டனப் போராட் டம் நடைபெறவுள்ளது.
இதில் உணர்வுள்ள அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.