728x90 AdSpace

<>
Latest News
Thursday, 3 October 2019

யுத்தத்தில் இரு கண்களையும் காலையும் இழந்து வாழ்வாதாரத்திற்காக ஏங்கி நிற்கும் முன்னாள் போராளி!

இலங்கையில், 2007 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தின ருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டு இரண்டு கண்களையும் ஒரு காலையும் இழந்த நிலையில் வெள்ளாங்குளம் கணேசபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளியான இராமையா புஷ்பரெட்ணம் வறுமையான நிலையில், செய்வதறியாது வாழ்ந்து வருகின்றார். 

இரண்டு பிள்ளைகளுடன் மனைவியின் துணையோடு வாழ்ந்து வரும் இரா மையா புஷ்பரெட்ணம் யுத்தம் நடை பெற்ற போது இரு கண்கள் மற்றும் காலை இழந்தார். 

யுத்தம் நிறைவடந்த பின்னர் தற்போது கணேசபுரம் வெள்ளாங்குளம் பகுதியில் மீள் குடியேறி வசித்துவருகின்றார். மீள்குடியேறிய நிலையிலும் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சிரமங்கள் மற் றும் பொருளாதார கஸ்ரத்தின் மத்தியில் போராட்ட நினைவுகளை சுமந்த வாறு வாழ்க்கையை கொண்டு செல் கின்றார். 

இவர்கள் சில நேரங்களில் ஒரு வேளை உணவுடனே உறங்க போகும் நிலை யும் உள்ளது. இந்த நிலையில், இராமையா புஷ்பரெட்ணத்தின் வாழ் வாதரத் திற்கென பிரதேச செயலகம் ஊடாக சில கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள் ளன. 

ஆனாலும் பார்வை உள்ளவர்களே ஒழுங்காக பராமரிக்க முடியாத கோழிக் குஞ்சுகளை பராமரித்து வாழ்வாதரத்தை கொண்டு செல்லலாம் என்று நம்பிய அவருக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. 

நோய் காரணமாகவும் கன மழை காரணமாகவும் அனைத்து கோழிக் குஞ்சு களும் இறந்து விட்டன. தற்போது வெறும் கோழிக் கூட்டை மட்டுமே வைத்தி ருக்கின்றனர். 

அதேவேளை, மதிய உணவுக்காக திரிபோசாவுடன் வாசலின் நின்றவாறு வீதி யைப் பார்த்துக் கொண்டு இருக்கும் முன்னால் போராளியின் மகன், குடும்ப வறுமை காரணமாக அம்மம்மா வீட்டில் தங்கியிருக்கும் மகள், அவருடைய மனைவி தன்னையும் கவனித்துக் கொண்டு 5 வயது மகனையும் கவனித்து பார்வையற்ற கணவனின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு கால த்தை கழிக்கின்றார். 

கொடுமையான வறுமை காரணமாக கண்கள் இல்லை கால் இல்லை என்றா லும், ஒருவேளை உணவுக்காக என்றாலும் உழைக்க வேண்டும் என தற்போது தோட்டச் செய்கையில் ஈடுப்பட்டு வருகின்றார். 

அதுவும் மனைவியின் துணையின்றி முடியாமல் போகின்றது. தற்போது மருத்துவச் செலவும் அதிகரித்து வருவதால் என்ன செய்வது என்று அறியா மல் திண்டாடும் புஷ்பரெட்ணம் பார்வையற்றவர்கள் செய்யக் கூடிய ஏதவது தொழிவாய்ப்பை என்றாலும் செய்வதற்கான உதவியை கோரு நிற்கின்றார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: யுத்தத்தில் இரு கண்களையும் காலையும் இழந்து வாழ்வாதாரத்திற்காக ஏங்கி நிற்கும் முன்னாள் போராளி! Rating: 5 Reviewed By: Thamil