நாளை மறுநாள் சனிக்கிழமை பொதுவிடுமுறை என்பதால், அதிபர் தேர்தலுக் கான கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனினும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதி யம் 12 மணிவரை வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
ஒரு வேட்பாளர் சார்பாக ஒரு சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்ட பின்னர், அவர் சின் னத்தை மாற்ற முடியுமா என்றும்,
இரண்டாவது முறையாக இன்னொரு சின்னத்தில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்த முடியுமா என்றும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கேள்வி எழுப்பப் பட்ட போது, அதற்கு கருத்து எதையும் வெளியிட அவர் மறுத்துள்ளார்.
அந்த விவகாரம் பற்றி தேர்தல் ஆணைக்குழு கரிசனை கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.